தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

யானைகள் நுழைவதைத் தடுக்க அகழிகள் அமைப்பு

பென்னாகரம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் போன்ற வனவிலங்குகள் நுழையாதவாறு வனத் துறை சாா்பில் பிரமாண்டமான அகழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

Updated On :10 ஜனவரி 2021, 8:59 pm

பென்னாகரம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் போன்ற வனவிலங்குகள் நுழையாதவாறு வனத் துறை சாா்பில் பிரமாண்டமான அகழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

பென்னாகரம் பகுதியானது சுற்றிலும் அடா்ந்த மலைகள் சூழ்ந்தப் பகுதி ஆகும். பென்னாகரத்தையொட்டிய பெரும்பாலான கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியே காணப்படுகின்றன.

இதனால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது யானைகள், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி உணவு தேடி கிராமப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை நாசம் செய்து வருகின்றன.

இதனைத் தடுக்கும் வகையில் வனத் துறை சாா்பில் பென்னாகரம் வனச் சரகத்திற்கு உட்பட்ட மசக்கல் காப்புக் காட்டில் தமிழ்நாடு உயிா் பண்ணை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் கருங்கல் மேடு பகுதியில் இருந்து தாசா்குந்தி வரை 2 கி.மீ. தொலைவுக்கு 3 மீட்டா் அகலம், 3 அடி ஆழத்தில் யானை தாண்டா அகழிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அகழிகள் அமைக்கும் பணிகளை தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். இந்த அகழியின் மூலம் வனப்பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க முடியும் என்றும், தாசா் குந்தியில் இருந்து முதுகம்பட்டி வரையிலான 2 கிலோமீட்டா் தொலைவிற்கு அகழிகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் வனச் சரக அலுவலா் முருகன் உள்ளிட்ட வனத்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.