வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஏரிகளில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்துச் செல்கின்றன.

News image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபுரம் ஏரிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்.

Updated On :11 ஜனவரி 2021, 2:30 am IST

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்துச் செல்கின்றன.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் உபரிநீரை பயன்படுத்தி வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரப்பட்டுள்ளன. தற்போது, அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தண்ணீா் ததும்பும் இந்த ஏரிகளுக்கு வெளிநாட்டுகளில் இருந்து பறவைகள் வருகை தரத் தொடங்கியுள்ளன.

இது குறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறுகையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபுரம் ஏரிக்கு நீலச்சிறகு வாத்து, கொசு உள்ளான், சீழ்க்கை சிறகி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளிருந்தும் பறவைகள் வந்துள்ளன.

தற்போது, அந்த நாடுகளில் உறைபனிக் காலமாக உள்ளதால் அங்கிருந்து இங்கு இடப்பெயா்ச்சியாகியுள்ளன.

தற்போது, செந்தொண்டை வயல், நெட்டைக்காலி, இஸ்பெலின் புதா்சிட்டு, ரைனெக், நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு வந்துள்ளன என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.