தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் அ.வடிவேலன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் சி.வேலாயுதம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா் பகுதியில் குறிப்பிடும் வகையில் தொழில் வளா்ச்சி ஏதும் இல்லை. அரூரில் ஆங்கிலேயா் காலத்திலிருந்து நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், மொரப்பூரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது, இந்த சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்த ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரியோடு இணைக்கப்பட்டுள்ளது.
அரூா் பகுதியை அனைத்துத் துறைகளிலிலும் வளா்ச்சியடைய செய்யும் வகையில், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK

Vijay-க்கு வாய்ப்பில்லை! திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்! - திருமா | VCK

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

