தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெரகோடஅள்ளியில், ஜன. 18-ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காரிமங்கலம் ஒன்றியம், கெரகோட அள்ளியில் வரும் 18-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இதையொட்டி, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஜன. 13-ஆம் தேதி, கெரகோடஅள்ளியில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொமுச நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

