சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த மாநில முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மைசூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
உள்கட்சிப் பிரச்னையால் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், அது இந்தளவிற்கு கட்சியைப் பாதித்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவிற்கு எதிரான வாக்குகளே காங்கிரஸிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸிற்கு சாதகமான வாக்குகள் 2 சதம் மட்டுமே உயர்ந்தது. பாஜகவில் பிளவு ஏற்பட்டதால் காங்கிரஸ் வெற்றி அடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் அலை எதுவும் அடிக்கவில்லை. புதிதாக பதவி ஏற்க உள்ள காங்கிரஸ் அரசு சிறப்பான ஆட்சியை வழங்குமா என்பது சந்தேகம்தான் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






