இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தலைநகரை பசுமையாக்குவோம்: தில்லிவாசிகளுக்கு முதல்வர் அழைப்பு

தலைநகரை பசுமையாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:03 am IST

தலைநகரை பசுமையாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் தில்லிவாசிகளுக்கு முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்தார். 

கோன்ட்லி பகுதியில் ஜல போர்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அதில் பல்லுயிர் பெருக்க வழிகாட்டியை வெளியிட்டு ஷீலா தீட்தித் பேசியது:

தில்லியில் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படுவதால் 22 சதவீதம் பசுமை அதிகரித்துள்ளது, காற்றில் மாசு குறைந்துள்ளது.

தில்லி முழுவதும் 40 இடங்களில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் பசுமைத் தலைநகரமாக தில்லி உருவெடுத்துள்ளது.

தில்லியை மேலும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோன்ட்லியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இவை வளர்ந்து மரங்களாகும் போது கோன்ட்லி பகுதியே பசுமையாகக் காணப்படும்.

மரக்கன்றுகளை நட்டு பராமரித்துவரும் மாணவர்கள், சமூகத்துக்கு முன்னுதாரணமாக உள்ளனர் என்று ஷீலா தீட்சித் கூறினார்.

விழாவில் வேம்பு, மா, நெல்லி, ஆலம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள் 300 பேரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.