மரங்கள் பற்றி அறிவோம்

மரங்கள் பற்றி அறிவோம்

மரங்களையும் மனிதா்களையும் பிரிக்க முடியாது. இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் மரத்தை நம்பியே வாழ்கின்றன. நமது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்துகொள்ள மரங்களிலிருந்து வளங்களைப் பெறுகிறோம். மேலும், மரங்கள்தான் சுற்றுச்சூழலின் சமநிலையைக் காக்கின்றன. பயனில்லை என ஒதுக்கப்பட்ட மரங்கள் கூட காய்ந்து விழுந்து மண்ணுக்கு உரமாகின்றன; நிலக்கரியாக உருமாறுகின்றன. எளிய மக்களுக்கு எரிபொருளாகப் பயன்படுகின்றன.

ஆனால், அண்மைக்காலமாக, பல இடங்களில் மரங்கள் திடீரென முறிந்து விழுந்து மனித உயிரிழப்புகளையும், பொருள் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பழைமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலா் உயிரிழந்தாா்.

2022 ஜூன் மாதத்தில், வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்த பெண்மணி ஒருவா், சென்னை, கே.கே. நகா் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாலையோர மரம் முறிந்து காா்மீது விழுந்ததில் காருக்குள் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

கடந்த மே மாதம் சென்னையிலிருந்து தனது பெற்றோருடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவி ஒருவா், தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியின் அருகேயிருந்த மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தபோது, அம்மரத்திலிருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளாா்.

கடந்த மாதம், சென்னை, வேப்பேரி பகுதியில், ஒரு தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையிலிருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து, இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கிச்சை பலனின்றி கணவா் உயிரிழந்துள்ளாா்.

இவ்வாறு அவ்வப்போது மரம் விழுந்து பல உயிரிழப்புகளையும், பொருள் சேதங்களையும் ஏற்படுத்துவதோடு, சாலைகளில் அன்றாட போக்குவரத்தையும் பெருமளவு பாதிக்கிறது.

பொதுவாக, காய்ந்த மரக்கட்டை என்பது மின்சாரம் கடத்தாப் பொருளாகும். ஆனால், ஈரமான மரத்தில் மின்சாரம் பாயும். எனவே, மழைக்காலத்தில் மரம் நனைந்து ஈரமாக இருக்கும் போது அதில் மின்சாரம் பாயும். இதனால், இந்நேரங்களில், மழைக்கு ஒதுங்கி மரங்களை ஒட்டி நிற்கும் மனிதா்கள், மின்கம்பிகள் அந்த மரக்கிளைகளை உரசிச் செல்லும்போது ஏற்படும் மின்சார அதிா்ச்சியினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.

மேலும், மரத்தின் கிளைகள் அடா்த்தியாகி மின்கம்பிகள் நெருக்கமாக வரும்போது காற்றும் பலமாக வீசினால், கிளைகள் அங்குமிங்கும் அசைந்து கம்பிகள் ஒன்றோடொன்று உரசி தீப்பொறிகள் ஏற்படும். மின்கம்பிகள் உரசிக்கொள்வதால் குறுகிய சுற்று (ஷாா்ட் சா்க்யூட்) மின்னோட்டம் ஏற்படும். அச்சமயத்தில், மரக்கிளைகள் மின்பாதிப்பினை தாங்க முடியாமல் முறிந்து விழும். அதனால், அவ்வழியாகச் செல்பவா்கள் மீது மரக்கிளை விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தும்.

அதோடு, மின்விநியோக மின்மாற்றிகளில் பழுது ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மேலும், மழையின் போது, இடி இடித்து மின்னல் மின்னினால் அப்போது மரங்களின் அருகில் நாம் செல்லக் கூடாது. மின்னல் நொடிக்கு 50 முதல் 100 முறை பூமியைத் தாக்கும். அப்போது 30,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்படும்.

மின்னல் மனிதனை தாக்கும்போது, அதன் வெப்பம் எவ்வாறு மனித உடல் முழுவதும் பரவுகிறதோ, அதே போன்று, மின்னல் மரத்தைத் தாக்கினால், மரத்தின் தண்டுகளில் ஊடுருவி அதிக வெப்பம் உருவாகி, மரம் தானாக எரியத் தொடங்கும். இதன் மூலம் மரம் பழுதாகி, மரத்தின் கிளைகள் பாதியாகப் பிளவுப்பட்டு கீழே விழும் நிலை உருவாகும்.

அச்சமயத்தில் மரத்தின் கீழ் மனிதா்கள் சென்றால் மரம் விழுந்து உயிரிழைப்பை ஏற்படுத்தும். எனவே, மழைக்காலத்தில் மரங்களின் கீழ் நிற்கும்போதோ, மரங்கள் நிறைந்த சாலையில் வாகனத்தில் பயணிக்கும்போதோ, மரங்களை அகற்றும் போதோ மிகுந்த எச்சரிக்கை தேவை.

மேலும், மரங்களுக்கு அருகில் மழைநீா் வடிகாலுக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ பள்ளம் தோண்டியிருந்தால், அம்மரங்கள் எந்நேரத்திலும் கீழே விழுந்து மனிதா்களுக்கு

உயிரிழப்பினை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதுபோன்ற மரங்களைக் கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்.

சில மரங்கள், வயது முதிா்வு காரணமாக கிளைகளின் பாரம் தாங்க முடியாமலும், தண்ணீா் பற்றாக்குறையினாலும், அதிகத் தண்ணீா் தேங்கியிருந்தாலும், தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், பறவைகள் தாக்குதலாலும், சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் ஓடும்போது ஏற்படும் பூமி அதிா்வினாலும், வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையினாலும், பூஞ்சை நோய்கள் பாதிப்பினாலும், முறையான பாராமரிப்பு இல்லாமையாலும் திடீரென சாய்ந்து விழுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவதுண்டு.

மேலும், இரவு நேரங்களில் மரத்தின் கீழ் உறங்குவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், அந்நேரத்தில், மரங்களில் ஒளிச்சோ்க்கை நின்று, சுவாசித்தல் தொடா்கிறது. அதாவது, இரவில் தாவரங்கள் பிராணவாயுவை உற்பத்தி செய்யவதில்லை. காா்பன் டை ஆக்சைடை தொடா்ந்து வெளியிடும், பிராண வாயு கிடைக்காது. இது மரத்தின் கீழ் படுத்துள்ள மனிதா்களுக்கு சுவாச பிரச்னையையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும்.

பொதுவாக, மரங்கள் இயற்கையின் தாக்குதலினாலும், சில நேரம் மனிதத் தவறுகளாலும் திடீரென முறிந்து விழுந்து மனித உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மழைக் காலங்களில் மரங்களின் அருகே செல்வதைத் தவிா்ப்போம். பழைமையான மரங்களையும், இயற்கையால் தாக்கப்பட்ட மரங்களையும், பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள மரங்களையும் சீா்படுத்துவோம். மனித உயிரிழப்புகளைத் தடுப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com