அதேபோல், சென்ற மார்ச் மாதம், சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா அதிகாரியை தாக்கியதிற்கு லொகானியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தனது விமான நிலைய ஊழியர்கள் அனைவரையும் கூட்டி அவர்கள் முன்னிலையில் யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு முடிவை எடுத்தார் லொகானி. அவர் எடுத்த அந்த அதிரடி முடிவால், ஏர் இந்தியா அதிகாரியைத் தாக்கிய அந்த எம்பி, தற்போது இந்தியாவில் உள்ள எந்த விமானத்திலும் பயணம் செய்ய முடியாமல் ஆனது. ‘இந்திய அரசியல்வாதி விமானத்தில் பயணம் செய்ய தடை’ என்ற தடாலடி முடிவு இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்று. இந்திய விமான வரலாற்றில், விமானத்தில் பயணம் செய்ய அரசியல்வாதிக்கு தடை விதித்திருப்பது இதுவே முதல் தடவை. அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்தத் தடை ஒரு பாடம்.