‘அரசே! இரண்டு மகன்களும் அடுத்தவர் ஆட்சியை நாசம் செய்ய திருடர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார்கள். இதனால், கொள்ளையைத் தொழிலாக கொண்டவர்கள் மட்டுமல்லாது, இவர்களின் அன்பைப் பெறுவதற்காக பலர் புதிதாக கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்கள். இவர்கள் இருவரும் சிறந்த குடிமகன்களை உருவாக்கவில்லை. மாறாக சிறந்த கொள்ளைக்காரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்தவர் ஆட்சி செய்யும் போது அதில் குழப்பம் விளைவித்தால், அந்த ஆட்சி தமக்கே கிடைக்கும் என்று நம்பினார்கள். இவர்களை அரசனாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், மக்கள் அனைவரும் திருடர்களாக மாறவேண்டும். நடைபெறும் ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி மற்றொரு அதிருப்தியை ஆட்சியில் அமரவைக்கும் என்று கணக்குப்போடுகிறார்கள். இந்தக் கணக்கை காலம் பொய்யாக்கும். ஆகையால், இவர்களில் ஒருவரை தேர்தெடுத்து திருடர்களுக்கு தலைவனாக்குங்கள். மக்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கட்டும்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.