"ஊடகங்களை விட்டு விடுங்கள். இந்த சமூகவலைதளங்களில் சென்னை வெள்ளத்தின் போது கொதித்த பிரபலங்கள், மக்கள், இளைஞர்கள் என எவருமே இந்த கஜா புயல் ஏதோ ஜாலியாக வந்து சென்றதைப் போல் கண்டும் காணாமல் இருப்பது என்ன? டெல்டா என்பது தான் தமிழ்நாட்டின் இதயம் போன்றது. இதயம் காயப்பட்டு துடித்துக் கொண்டிருக்கையில் கண்டும் காணாமல் இருப்பதன் பலன் உங்களைத் தான் சேரும். உதவுங்கள் என யாரும் கேட்கவில்லை. ஆனால் எவ்வித சேதமும் ஆகாதது போல் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள் என்று தான் சொல்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார். இது ஆயிரம் சம்மட்டிகளைக் கொண்டு அடித்தது போன்ற காயத்தை உங்கள் இதயத்தில் ஏற்படுத்தாவிட்டால் தொடர்ந்து கட்டுரையைப் படிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் வேலையைப் பார்க்கலாம்.