ஊழல்வாதிகளுக்கு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்றும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை எடுத்த பின்னர் தான் உத்தரப்பிரதேசத்திலும், குஜராத்திலும் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றோம். இந்த நடவடிக்கைக்கு பிறகு தான் கறுப்பு பணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு வெளிப்பட்டது. கறுப்பு பணத்தை தடுக்க யாராவது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் நிலவியது. அதை பாஜக வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் கணக்கில் வராத ரூ.1,30,000 கோடி அளவுக்கு வரி மற்றும் அபராதத் தொகையாக வசூலானது. ரூ.50,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரூ.6,900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களும், ரூ.1,600 கோடி மதிப்பில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக பதிவுபெறாத 3,38,000 ஷெல் நிறுவனங்கள் கண்டெடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி இரட்டிப்பாகியுள்ளது. அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது.