என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஓட்டுரிமையின் மகத்துவம் அறியா மட ஜனங்களா நாம்?!

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்றார் பாரதி; அதைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். என்பதை மிக எளிமையாக உணர்த்துகிறது இந்தச் சிறுகதை.

News image
Updated On :11 ஏப்ரல் 2019, 3:09 pm IST

2019 பாராளுமன்றத் தேர்தல் வெகு நெருக்கத்தில் இருக்கிறது. 18 எம் எல் ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அதற்கான இடைத்தேர்தலும் தற்போது நடைபெறுவதால் தமிழகம் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளைத் தீர்மானிக்கவிருக்கும் இரட்டைத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில் கீழ்க்காணும் சிறுகதையை வாசித்துப் பார்த்தீர்களென்றால் 2008 அல்ல அதற்கும் முன்பே இந்தியத் தேர்தல்களை இன்னும் நேரடியாகச் சொல்லவேண்டுமானால் தமிழகத் தேர்தல்களை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.

சுதந்திரத்துக்குப் பிறகு மக்களால் மக்களுக்காக மக்களாகிய நாமே சுயமாக ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த ஆளும் அரசாங்கத்தை குற்றம் சொல்கி்றோம், அவர்கள் ஆட்சியென்ற பெயரில் சர்வாதிகாரத் தனத்துடனும், சுயநலத்துடனும் நம்மைக் கசக்கிப் பிழிந்தால் தேர்தல் காலங்களில் ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களைக் குற்றம் சொல்கிறோம், எதிர்க்கட்சிகளை குற்றம் சொல்கிறோம். எப்போதும் குற்றம் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர, எந்த வேட்பாளர் நல்லாட்சி தரக்கூடியவர்? எந்தத் தலைவரைத் தேர்ந்தெடுத்தால் அவரால் நமக்கு நல்லாட்சி கிடைக்கக் கூடும் என்பதைப் பற்றியெல்லாம் எப்போதாவது யோசித்து நமது வாக்கை அவர்களுக்கு அளித்திருக்கிறோமா என்றால் அது எப்போதும் சந்தேகத்துக்குரியதே.

ஏனெனில் தலைமை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?

யாரைத் தலைவர்களாக ஆக்க வேண்டும் என்பதையே அறியாத மட ஜனங்கள் நாம். இந்த உண்மையை நாம் உணர்ந்தால் மட்டுமே நல்ல தலைமைகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.

இல்லையேல் வறண்டு வெடித்த பூமி ஒரு சொட்டு மழைக்காக தவம் இருப்பதைப் போல காலமெல்லாம் நம்மை ரட்சிக்கக் கூடியதொரு தலைமைக்காக தேர்தல்கள் தோறும் நாம் காத்திருக்க வேண்டியது தான். அதற்காக ஆட்சிபீடம் வெற்றிடமாகி விடப்போகிறதா என்ன? நல்லதோர் வீணையைத் தாங்கும் வரை ஆட்சிக் கட்டிலானது போனால் போகட்டுமென்று வல்லூறுகளும், பிணந்தின்னிக் கழுகுகளும், ஆட்கொல்லிப் புலிகளும், நயவஞ்சக நரிகளுமாக மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பலரது உறைவிடமாக  எப்போதும் நிரம்பியே இருக்கட்டும்.

அதிலிருந்து விடிவு காண விரும்புவோர் இனியாகிலும் தங்களது ஓட்டுரிமையின் மகத்துவத்தை உணர்ந்தால் சரி.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்றார் பாரதி; அதைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். என்பதை மிக எளிமையாக உணர்த்துகிறது இந்தச் சிறுகதை.

இந்தத் தேர்தலில் நல்ல தலைமையைத் தீர்மானிக்க விரும்புகிறவர்கள் உங்கள் வாக்குரிமையின் மகத்துவம் உணர்ந்து அதை செயல்படுத்துங்கள். எந்தத் தலைமையின் பாலும் நம்பிக்கை இல்லை என்றால் 49 ஒ பிரிவைப் பயன்படுத்தி ஓட்டளியுங்கள்.

மக்களுக்காகத் தான் ஆட்சியாளர்களே தவிர ஆட்சியாளர்களுக்காக மக்கள் அல்ல எனப்தை இனி வரும் தேர்தல்கள் புரிய வைத்தால் மட்டுமே ஜனநாயகத்தின், மக்களாட்சியின் மாண்பு காக்கப்படும். கதையை வாசித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல மறவாதீர்!

யாருக்கும் வெட்கமில்லை!

(தேர்தல் சிறப்புச் சிறுகதை)

Story image
Story image
Story image

Related Article

தேர்தல் அறிக்கையில் கலக்கியது யார்? பாஜக - காங்கிரஸ் ஓர் பார்வை!

சென்னை ரயில் நிலைய பெயர் மாற்றத்தால் பரிதவிக்கும் பயணிகள்: சரி செய்ய முயலும் ரயில்வே

ரஜினியின் பகீரத யோஜனா! புரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ!

இயக்குனர் மகேந்திரனை அழைக்க இயலாத அலைபேசி எண்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் பலகை மாற்றம்: முக்கியமான அந்த வார்த்தை மிஸ்ஸிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.