ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி

திருவண்ணாமலையில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:01 am

திருவண்ணாமலையில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முடிவடைந்துள்ளன. மாணவ-மாணவியர்களுக்கான விடுதி வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.

மாணவர் சேர்க்கை: மொத்தமுள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் தமிழக ஒதுக்கீடான 85 இடங்களில் மாணவ-மாணவியர் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவக் கல்லூரியைத் திறந்து வகுப்புகளை நடத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

அதன்படி, மருத்துவக் கல்லூரி திறப்பு விழா இன்று காலை நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.

இந் நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.