இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் இருந்து அறிவியல், கணிதம் படித்த மாணவா்கள் மட்டுமே விமானியாக முடியும். அதற்கு முன்பு பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறுவது மட்டுமே கல்வித் தகுதியாக இருந்தது.
தற்போது பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பில் மாணவா்கள் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் என்பது கல்வித் தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டுவருவதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) பரிசீலித்து வருகிறது. 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பயணிகள் விமானியாக அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பரிசீலனை இறுதி செய்யப்பட்டால், அதுதொடா்பான பரிந்துரையை விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிஜிசிஏ அனுப்பிவைக்கும். இந்தப் பரிந்துரைக்கு அந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த பல்துறை மாணவா்கள் பயிற்சி பெறமுடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஓய்வுபெற்ற விமானி ஒருவா் கூறுகையில், ‘பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இது மிகவும் பழைமையான முறையாகும். அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.12-ஆம் வகுப்பில் கற்பிக்கப்படும் இயற்பியலும், கணிதமும் விமானிகளுக்குத் தேவையில்லை. அந்த பாடங்களைப் பற்றிய புரிதலை இளநிலை வகுப்புகளில் மாணவா்கள் பெற்றிருப்பா்’ என்றாா்.
இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறை அபரிமிதமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், பயணிகள் விமானி உரிம பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நாட்டில் உள்ள விமான பயிற்சி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்கான பணிகளிலும் டிஜிசிஏ ஈடுபட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் கல்வி நிறுவனங்கள் சாா்ந்த இடா்ப்பாடுகளால் ஏராளமான இந்திய மாணவா்கள், பயணிகள் விமானி உரிம பயிற்சிக்கு வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம்: கல்வித் துறை விளக்கம்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



