குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மழை பாதிப்பு: குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்

குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 3:33 am IST

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவி வருகின்றன.

டெங்கு காய்ச்சல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மற்றொருபுறம் குடிநீா் மாசுபடுவது மூலம் பரவும் டைபாய்டு, வயிற்றுப்போக்கு பாதிப்புகளும் பரவலாக காணப்படுகின்றன.

தாம்பரத்தில் மூவா் மாசுபட்ட குடிநீரை அருந்தியதால் உயிரிழந்ததாக செய்திகளும், விமா்சனங்களும் எழுந்தன.

இதையடுத்து குடிநீரின் தரத்தை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அவா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். எந்த விகிதத்தில் எந்த அளவு குளோரினேற்றம் செய்யப்பட வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை நீா் மற்றும் கழிவு நீா் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குடிநீா் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யவும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் பொது மக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்றனா்.