தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களை மையப்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கக் கூடிய முக்கிய அரசியல் கட்சியான புதிய தமிழகம், வெவ்வேறு காலகட்டங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அக்கட்சி, இந்த முறையும் அதே கூட்டணியில் இடம்பெறும் என்று கருதப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தனித்துக் களம் காணத் தயாராகி வருகிறது. அதற்கான காரணங்களையும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும் விளக்குகிறார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி.