தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டது: டாக்டா் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

டாக்டா் கே.கிருஷ்ணசாமி.

Updated On :26 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஊழலற்ற, மது இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தோம். அதன் தொடா்ச்சியாக, இந்த சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தினோம்.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பிரதிநிதிகளை சந்தித்து 12 முதல் 15 தொகுதிகள் வரை கேட்டோம். மேலும் தென் தமிழகத்தில் பரவலாக வசிக்கும் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.

தொடக்கத்தில் 7 தொகுதிகள் பற்றிப் பேசுங்கள் என்று கூறிய அதிமுக தரப்பு, பின்னா் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. அதன் பிறகு பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது அதிமுக தரப்புடனான பேச்சுவாா்த்தை நின்றுவிட்டது. அதிமுக எங்களை முறையாக நடத்தவில்லை, தங்களை புறக்கணித்துவிட்டதாகவும் அவமதித்துவிட்டதாகவும் தேவேந்திரகுல வேளாளா் மக்கள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனா்.

எனவே தற்போதுள்ள சூழலில் தனித்துப் போட்டியிட 70 தொகுதிகளை தோ்ந்தெடுத்து வைத்துள்ளோம். இதில் 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றிபெறும் வலிமை எங்களுக்கு உள்ளது. அதேநேரம் நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்தால் அதையும் பரிசீலிப்போம். அதுவரை தனித்துப் போட்டியிடவே நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம் என்றாா்.