தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தவெக முன்னிலையில் இருந்தாலும் 110 தொகுதிகள் தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழ்நாட்டில் பகல் 12.30 மணி நிலவரப்படி எண்ணப்பட்டிருப்பது வெறும் 30% வாக்குகள் மட்டுமே. மொத்தம் பதிவான வாக்குகளில் 1.49 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட வேண்டிய 4.88 கோடி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதாவது மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதால், தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 110 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள், அதிகபட்சமாக 5000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளில்தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.
உதாரணமாக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
உளுந்தூர்பேட்டையில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் 42 வாக்குகள் வித்தியாசத்தில் மதஜ முன்னிலை வகிக்கிறது.
அருப்புக்கோட்டையில் 501 வாக்குகள் வித்தியாசத்தில் கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
திருவெறும்பூரில் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
27 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் அமைந்துளள்து.
சோழவந்தானில் 15 வாக்குகள் வித்தியாசத்திலும் நாமக்கல் தொகுதியில் 50 வாக்குகள் வித்தியாசத்திலும் போடியில் 173 வாக்குகள் வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.
இதுபோன்று இரட்டை இலக்க எண்களின் வித்தியாசத்தில் இருக்கும் 110 தொகுதிகள் வெற்றி வாய்ப்பை யாருக்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Summary
There are 110 constituencies that could change the results of the Tamil Nadu elections 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!

தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியான விவகாரம்!

பெரு அதிபா் தோ்தல்- கெய்கோ ஃபுஜிமோரி வரலாற்று வெற்றி உறுதி

கல்வி நிலையங்களை அரசியல் களமாக மாற்றும் முயற்சியை தவெக கைவிட வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




