எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா... மருந்தாளுநர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 67 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா... மருந்தாளுநர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 67 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 5 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pharmacist (Clerital Cadre)

காலியிடங்கள்: 67

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.17,900 - 47,920

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2021

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விவரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com