ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மும்பையில் உள்ள இரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


மும்பையில் உள்ள இரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 01062022

பணி: Officer(Marketing)

காலியிடங்கள்: 18

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: அறிவியல், பொறியியல், வேளாண்மை, வேளாண் வேதியியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சந்தையியல், வேளாண் வணிக மேலாண்மை பிரிவில் எம்பிஏ முடித்து 2 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதணனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com