ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய சிறைச்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
வேலூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


வேலூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Packer Clerk - 02
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேக்கிங்கில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cook - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Garden Watchman - 01
சம்பளம்: 15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Sanitary Worker - 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 10.08.2022
மேலும் விவரங்கள் அறிய www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...