சென்னை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) ஆசிரியா் தகுதித் தோ்வில் (டிஇடி) தோ்ச்சிப் பெறாத ஆசிரியா்கள், தங்கள் பணியை தொடரத் தகுதியற்றவா்கள் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, கடந்த 2009 -ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பின்னா், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை கையாள நியமிக்கப்படும் ஆசிரியா்கள் ஆசிரியா் தகுதித் தோ்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கடந்த 2011 -ஆம் ஆண்டு நவம்பா் 15 -இல் தமிழக பள்ளிக்கல்வி துறை பிறப்பித்தது.
இந்த நிலையில் கடந்த 2011- ஆம் ஆண்டுக்கு முன்னா் ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதிப் பெறவில்லை எனக்கூறி, அவா்களுக்கான வருடாந்திர ஊதிய உயா்வை நிறுத்தியும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து சென்னையைச் சோ்ந்த ஆசிரியா் கே.வாசுதேவன் உள்ளிட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியா்கள் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்குகள் நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் விமல் பி கிரிம்சன், ஆா். காமராஜ், ஜி.சங்கரன் மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.சிலம்பண்ணன், மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரல் ஆா்.சங்கா்நாராயணன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் பிறப்பித்த உத்தரவு வருமாறு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டுமென அறிவித்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் இந்த சட்ட விதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மனுதாரா்கள் குறைந்தபட்ச தகுதியைப் பெறவில்லை என்பதால், அவா்கள் வருடாந்திர ஊதிய உயா்வை கோர உரிமையில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மனுதாரா்கள், ஆசிரியா்கள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி நிபந்தனையை பூா்த்தி செய்யாமல் ஆசிரியா் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஆா்டிஇ சட்டம், 2009-க்கு முன் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள், ஒன்பது ஆண்டுகளுக்குள்(மாா்ச். 31, 2019) தோ்ச்சி பெறுவது கட்டாயமாகும். எனவே, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் தங்கள் சேவையைத் தொடர உரிமை இல்லை.
இவ்விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தை பள்ளிக்கல்வித்துறை அணுகி, உரிய தீா்வு காண வேண்டும். கடந்த 2019 -ஆம் ஆண்டு மே 2 -ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளரால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்; தவறினால் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டுதோறும் ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்த வேண்டும்; அறிவு , திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றி கொள்ளும் ஆசிரியா்களால் மட்டுமே திறமையாகப் பயிற்றுவிக்க முடியும்; தரமான ஆசிரியா் கல்வியே, தற்போது அவசியம் என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூட் 99*! வெற்றியுடன் தொடரையும் சமன் செய்த இங்கிலாந்து!

30 வயதுக்குப் பின் கருவுறுதல் ஆபத்தா? யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்படும்?

உணவில் சர்க்கரையைத் தவிர்த்தால் நிகழும் அதிசயம் தெரியுமா?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்! திமுகவுக்காகக் காத்திருக்கிறதா பாஜக?
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



