ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உச்ச நீதிமன்றத்தில் வேலை: 25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :8 டிசம்பர் 2024, 1:53 pm

DIN

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 107

பணி: Court Master (Shorthand)

காலியிடங்கள்: 31

சம்பளம்: மாதம் ரூ.67,700

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 33

சம்பளம்: மாதம் ரூ.47,600

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Personal Assistant

காலியிடங்கள்: 43

சம்பளம்: மாதம் ரூ.47,600

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினியில் தட்டச்சு செய்யும் தேர்வு, சுருக்கெழுத்து(ஆங்கிலம்) தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டிற்கு சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றித் திறனாளிகள் பிரிவினர் ரூ.250, இதர பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.