அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

உச்ச நீதிமன்றத்தில் வேலை: 25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :8 டிசம்பர் 2024, 7:23 pm IST

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 107

பணி: Court Master (Shorthand)

காலியிடங்கள்: 31

சம்பளம்: மாதம் ரூ.67,700

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 33

சம்பளம்: மாதம் ரூ.47,600

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Personal Assistant

காலியிடங்கள்: 43

சம்பளம்: மாதம் ரூ.47,600

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினியில் தட்டச்சு செய்யும் தேர்வு, சுருக்கெழுத்து(ஆங்கிலம்) தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டிற்கு சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றித் திறனாளிகள் பிரிவினர் ரூ.250, இதர பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.