கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இலவச பி.டெக் படிப்புடன் வேலை: எங்கு?, எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய கடற்படையின் 10+2 (பி.டெக்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படித்து முடித்து இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

இந்திய கடற்படை(கோப்புப்படம்)

Updated On :14 ஜூலை 2024, 11:30 am

DIN

இந்திய கடற்படையின் 10+2 (பி.டெக்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படித்து முடித்து இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer(Executive & Technical Branch)

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 2.7.2005-க்கும் 1.1.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் JEE Main Exam - 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: JEE Main Exam - 2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2024.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால்

தேர்வு செய்யப்படுவோர் இந்திய கடற்படையால் வழங்கப்படும் 4 ஆண்டு இலவச பி.டெக் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதாவது Applied Electronics, Mechanical, Communication, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.

மேற்கண்ட படிப்பிற்கான அனைத்து செலவையும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வோருக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும்ய பி.டெக் படிப்பிற்கான வகுப்பு ஜனவரி 2025-இல் தொடங்கும்.

கேரளம் மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 ஆண்டு பி.டெக் படிப்பு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.