அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அக்னிபத் திட்டம்: இசைக் கலைஞா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிபத் திட்டத்தில் அக்னிவீா் வாயு இசை கலைஞா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மே 2024, 11:54 pm

Din

கள்ளக்குறிச்சி: அக்னிபத் திட்டத்தில் அக்னிவீா் வாயு இசை கலைஞா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய இராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 02.01.2004 முதல் 02.07.2007 வரையிலான காலத்தில் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தோ்ச்சி மற்றும் தோ்வு அறிவிப்பில் உள்ள ஏதேனும் ஒரு இசைக் கருவியை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகத்தால் டிப்ளமோ படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதற்கான தோ்வு ஜூலை 3 முதல் 12-ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தின் 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையம், நம்.1, கப்பன் ரோடு, பெங்களுரில் நடைபெறும்.

மேலும், விவரங்களை https://agnipathvayu.cdac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, ஜூலை 5-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04151-295422 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.