ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 72 இளநிலை பொறியாளர் பணியாளர் பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்

News image
Updated On :17 ஏப்ரல் 2025, 1:35 pm IST

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 72 இளநிலை பொறியாளர் பணியாளர் பணியிடங்களுக்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NCRTC/CO/HR/Rectt./O&M. 13/2025

பணி: Junior Engineer (Electrical)

காலியிடங்கள்: 16

தகுதி: பொறியில் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Electronics)

காலியிடங்கள்: 16

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (HR)

காலியிடங்கள்: 3

தகுதி: பிபிஏ, பிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,250 - 65,500

வயது வரம்பு : 25-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Junior Engineer (Mechanical)

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Civil)

காலியிடம்:1

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Programing Associate

காலியிடங்கள்: 4

தகுதி: அறிவியல், ஐடி, கம்பியூட்டர் அப்ளிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (Corporate Hospitality)

காலியிடம்:1

தகுதி: உணவக மேலாண்மை பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,250 - 65,500

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Maintainer (Electrical,Mechanical)

காலியிடங்கள் : 28

தகுதி: எலக்ட்ரிஷியன், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,250 - 59.200

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncrtc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.