
உணவு பாதுகாப்புத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 10/MRB/2025
பணி: Lab Technician (Grade - II)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,30,400
தகுதி: Chemistry, Bio-chemistry பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர்களில் மாற்றுத் திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர்கள் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினரைத் தவிர இதரப் பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிஎம்எல்டி பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு குறித்து மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, இதர அனைத்து பிரிவினர் ரூ. 300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.7.2025
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited only through online mode up to 29.07.2025 for recruitment to the post of Laboratory Technician Grade – II in Tamil Nadu Food Safety subordinate Service.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





