மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 3
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
பணி: Junior secretariat Assistant(General)
காலியிடங்கள்: 16
1. General - 10
2. Finance & Accounts - 3
3. Stores & Purchase - 3
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Driver(Non-Technical)
காலியிடங்கள்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் பணிக்குரிய சுருக்கெழுத்து தேர்விலும், தட்டச்சு தேர்விலும், ஓட்டுநர் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://cbri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில் கழகத்தில் மேலாளர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அருங்காட்சியகத்தில் டெக்னீசியன், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!







