அக். 17-இல் தனியாா் துறை 
வேலைவாய்ப்பு முகாம்
(கோப்புப்படம்)

அக். 17-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெறுகிறது.
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம்.

அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. கூடுதல் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com