அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

என்ஜினீயர் வேலை வேண்டுமா..? டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(சிஜிசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 800 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 நவம்பர் 2022, 2:52 pm IST


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(சிஜிசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 800 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், இசி, சிஎஸ், ஐடி பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எலக்ட்ரிக்கல், இசிஇ போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் 29 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
ஆர்வமும் தகுதியும் உள்ளோர் நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.powergrid.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.