தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துணை ராணுவத்தில் துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்பி அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2023, 9:08 am

DIN


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: Sub-inspecter (Pioneer)
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு ஆட்டோகேட் இல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 59
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பட்டம், பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter Female (staff nurse)
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது நர்சிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 -1,12,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவர். 

கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.6.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.