நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

துணை ராணுவத்தில் துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்பி அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2023, 2:38 pm IST


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: Sub-inspecter (Pioneer)
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு ஆட்டோகேட் இல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 59
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பட்டம், பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter Female (staff nurse)
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது நர்சிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 -1,12,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவர். 

கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.6.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.