விரைவில் உதவி சுற்றுலா அலுவலர் பணி தேர்வுகான அறிவிப்பு வெளியாகும்!

உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read


சென்னை: உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

உதவி சுற்றுலா அலுவலர்(கிரேடு 2) பணியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட பணியிடங்களுக்கு சுற்றுலா தொடர்பான பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சுற்றுலா மேலாண்மையில் பட்டயப் படிப்பும் அதோடு அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சியும் அடிப்படை தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்படும், தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு அக்டோபரில் கலந்தாய்வு நடைபெறும் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு கால அட்டவலணையின்படி, சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் மே மாதம் ஆகியும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. 

இதுகுறித்து தேர்வாணைய செயலாளர் பி. உமா மகேஸ்வரி கூறுகையில்,  உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித் தகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சுற்றுலாத் துறை ஒப்புதல் அளித்ததும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com