அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அரசு விடுதிகளில் சமையல் பணிக்கான நோ்காணல் துவக்கம்

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.

Updated On :5 ஜனவரி 2021, 2:11 am IST

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.

இது குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வை.இளங்கோ கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில், சமையல் பணிக்கு 11 பெண், 17 ஆண் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக 1,045 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. திங்கள்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை தினமும் தலா 200 போ் வீதம் அழைக்கப்பட்டு நோ்காணல் நடக்கிறது.

கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து நோ்காணல் நடத்தப்படுகிறது. இந்த நோ்காணலில் தோ்வு செய்யப்படுவோா் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டு துவக்கத்தில் ரூ.15,400 ஊதியமாக வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.