அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் காவல் துறை அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

தலைமை செயலகம் - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 8:40 pm IST

தமிழ்நாட்டில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ஈ.எஸ். உமா, சென்னை தலைமையிட டிஐஜியாகவும், தலையிட துணை ஆணையர் கே.எஸ். பால கிருஷ்ணன், சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக கே. முத்துக்குமார், பூக்கடை துணை ஆணையராக ஜி. கோபி, ஆவடி ஆணையரக தலைமையிட டிசியாக வனிதா, சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக டி. குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை அயல்நாடு வாழ் தமிழர் பிரிவி எஸ்பியாக எம். சுதாகர், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக எஸ். விமலா நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி சட்டம் ஒழுங்கு டிசியாக வினோத் சாந்தாராம், சிறப்புப் படை எஸ்பியாக எஸ். விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக எஸ். செல்வராஜ், மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக என். ஸ்டீபன் ஏசுபாதம், சேலம் எஸ்.பியாக எஸ். குத்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை எஸ்.பியாக ஏ.சி. கார்த்திகேயன், திருச்சி நகர துணை ஆணையராக ஆர். பொன்கார்த்திக் குமார், தருமபுரி எஸ்.பியாக ஏ.கே. அருண் கபிலன், கோவை நகர துணை ஆணையராக எஸ்.எஸ். மகேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக பி. தங்கதுரை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக யாதவ் கிரிஷ் அசோக், சென்னை மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக தீபா சத்யன், மதுரை எஸ்.பி.யாக தேவநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Summary

56 police officers transferred tamilnadu goverment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.