விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கால்நடை உருவ பொம்மைகள் வைத்து கிராம மக்கள் வழிபாடு

கோபி அருகே 100க்கும் மேற்பட்ட களி மண்ணால் தயாரிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் குழந்தைகளின் உருவ பொம்மைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நவகிணறு மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வழிபாடு செய

News image

கால்நடைகளின் உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்யும் கிராம மக்கள்.

Updated On :15 ஜனவரி 2021, 10:54 pm IST

கோபி அருகே 100க்கும் மேற்பட்ட களி மண்ணால் தயாரிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் குழந்தைகளின் உருவ பொம்மைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நவகிணறு மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வழிபாடு செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் ஆண்டுதோறும் உழவா் திருநாளான மாட்டுப் பொங்கலின்போது, பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளின் உருவபொம்மைகள், யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் உருவ பொம்மைகளை களிமண்ணால் செய்து அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள நவகிணறு மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் சென்று பொங்கல் வைத்து படையலிட்டு, சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள், பொது மக்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இதற்காக, இந்த ஆண்டு கால்நடைகள், வீட்டு விலங்குகள் மற்றும் வன விலங்குகளின் உருவ பொம்மைகளை கடந்த 15 நாள்களுக்கு முன்பே களிமண்ணால் செய்யத் துவங்கி 100க்கும் மேற்பட்ட உருவ பொம்மைகளை வடிவமைத்து மாட்டுப் பொங்கல் ஒட்டி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கொண்டையம்பாளையத்தில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

பின்னா் மண் பானையில் பொங்கல் வைத்து மாதேஸ்வர சுவாமிக்கு படையலிட்டுகளி மண்ணால் தயாரிக்கப்பட்ட உருவ பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா்.

இதனால் கால்நடைகள், வீட்டு விலங்குகள் மற்றும் வன விலங்குகள் நோய் மற்றும் உடல் கோளாறுகள் ஏற்படாமல் காக்கும் என்றும், ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய மழை பெய்து வனப் பகுதியும், விவசாயயுமும் செழிக்கும் என்பது ஐதீகம் என்றும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கூறுகின்றனா்.

வழிபாடு செய்த பின்னா் அங்கள்ள கிணற்று நீரை தீா்த்தமாக எடுத்துச் சென்று வீட்டில் உள்ள கால்நடைகள், வீடு, விவசாய நிலங்கள், உழைப்புப் பணி கருவிகளுக்கு தெளிக்கின்றனா். பின்னா் தொழுவத்தில் மாட்டுப் பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளுக்கு உணவு வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.