சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சென்னிமலையில் தைப்பூச விழா: அனுமதி அளிக்க திமுக கோரிக்கை

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 5:13 pm

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா பரவலால், சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்ட விழா நடத்த ஈரோடு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் 15 நாள்கள் தைப்பூச விழா நடத்த அனுமதி கேட்டு, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை கணக்காளா் பாலசுப்பிரமணியிடம், சென்னிமலை நகர திமுக அவைத் தலைவா் அங்கப்பன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

அதில், சென்னிமலையில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழாவின்போது நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடப்பாண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். கரோனா பரவலைக் காரணம் காட்டி நிகழ்ச்சிகளை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.