தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முகவரிச் சான்று ஆவணங்கள் இல்லாமல் ஆதாரில் முகவரி மாற்றுவது எப்படி?

முகவரிச் சான்று ஆவணங்கள் இல்லாமல் ஆதாரில் முகவரி மாற்றுவது எப்படி

ஆதார்

ஆதார்

Published On :21 வினாடிகள் முன்பு

ஆதார் முகமை பட்டியலிட்டிருக்கும் முகவரிச் சான்று ஆவணங்கள் எதுவும் இல்லையென்றாலும்கூட, ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய முடியும்.

ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கு முகவரிச் சான்றாகப் பல்வேறு வகையான ஆவணங்களை யுஐடிஏஐ (UIDAI) ஏற்றுக்கொள்கிறது.

ஆதார் முகவரி மாற்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு, முகவரியைக் கொண்ட சான்றிதழ் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

2. பான் அட்டை (பான் கார்டு)

3. வங்கி கணக்குப் புத்தகம் (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)

3. குடும்ப அட்டை

4. வாக்காளர் அடையாள அட்டை

5. மாற்றுத்திறனாளி அட்டை

6. ஊரக வேலை அட்டை

6. மின்சாரக் கட்டண ரசீதுகள் (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது),

7. தொலைபேசி லேண்ட்லைன் கட்டண ரசீது/ தொலைபேசி (போஸ்ட்பெய்ட் மொபைல்) கட்டண ரசீது/ பிராட்பேண்ட் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

8. தண்ணீர்க் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

9. எரிவாயு இணைப்பு (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

10. காப்பீட்டு ஆவணம் (ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும்)

11. சொத்து வரி ரசீது (ஓராண்டுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

12. குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்/ தானப் பத்திரம்

13. பதிவு செய்யப்படாத வாடகை/ குத்தகைப் பத்திரம் இதில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்றிக் கொள்ளலாம்.

இருப்பினும், பட்டியலிடப்பட்டுள்ள வழக்கமான ஆவணங்கள் ஒரு சிலரிடம் இருக்காது என்பதை அனைவரும் அறிவோம். விதிவிலக்குகளுக்கான சில மாற்று வழிகள் ஆதார் முகமையால் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ் கொண்டு ஒருவர் தங்களது ஆதார் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

முகவரியை உறுதி செய்யும் அடிப்படை ஆவணங்களோ அல்லது பயன்பாட்டுக் கட்டண ரசீதுகள், வங்கி கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களோ இல்லையென்றால், அரசு அதிகாரிகளின் கையெழுத்துப் பெற்று, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழைத் தயாரித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1. நாடாளுமன்ற உறுப்பினர் (MP)

  • 2. சட்டப்பேரவை உறுப்பினர் (MLA)

  • 3. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (Gazetted Officer)

  • 4. வட்டாட்சியர் (Tehsildar) உள்ளிட்டோரிடம் இந்த சான்றிதழை பெறலாம்.

இந்த ஆவணம், அதனை வழங்கும் அதிகாரியின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பில் (letter head) வழங்கப்படுவது அவசியம்.

Summary

How to change the address on Aadhaar without address proof documents?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.