பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!
பிரபல நிறுவனங்களின் பெருங்காயத் தூள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன

பெருங்காயத் தூள் தடை - ஏஎன்ஐ
நாட்டின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி மற்றும் எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் பொருள்கள் இல்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெருங்காயங்களை திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
ஃபெனுலா என்னும் செடியிலிருந்து தயாரிக்கப்படுவதே பெருங்காயம். இந்தச் செடியின் தண்டு, வேர்ப் பகுதிகளை காய வைத்து, அதனுடன் கொஞ்சம் கோதுமை, கம் அராபிக் போன்றவை சேர்க்கப்பட்டுத்தான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, பெருங்காயத் தூளில் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு அளவு குறைந்தபட்சம் 5 சதவிகிதம் இருக்க வேண்டும். அதாவது ஒரு பெருங்காய டப்பாவில் 5 சதவிகிதம் அளவுக்காவது பெருங்காயச் சாறு இருக்க வேண்டும். ஆனால், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளில் 1 முதல் 3 சதவிகிதம் மட்டுமே சாறு இருந்துள்ளது ஆய்வச சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில பாக்கெட்டுகளில் பெருங்காய சாறு பூஜ்யமாகவும் இருந்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக ஒரு சதவிகிதம்தான் ஸ்டார்ச் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த நிறுவனப் பெருங்காயங்களில் 15 முதல் 35 சதவிகித ஸ்டார்ச் சேர்க்கப்பட்டுள்ளது.
இருக்க வேண்டிய பெருங்காயமே இல்லாமல், குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய ஸ்டார்ச் அதிகம் சேர்க்கப்பட்டிருந்ததால், மக்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, இந்த நிறுவனப் பெருங்காயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாள்களாக மக்களிடையே அதிகம் பிரபலமான இவ்விரண்டு பெருங்காய நிறுவனங்களும் தங்களது பொருள்களை தரமான தயாரிப்பாக மாற்றி அதனை அரசுக்கு அனுப்பி அவை ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டு இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர அனுமதி வழங்கப்படும் வரை யாரும் இந்த நிறுவனப் பெருங்காயங்களை வாங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பலருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சிறிய மளிகைக் கடைகளில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட பொருள்களை வாங்கி பயன்படுத்தும் ஆபத்தும் உள்ளது. திரும்பப் பெறப்பட்ட பெருங்காயங்களை, இந்த நிறுவனங்களே மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் அபாயத்துடன், அனுமதி பெற்றுவிட்டு சில காலத்தில் மீண்டும் இந்த தரமற்ற பெருங்காயங்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் தொடர்ச்சியான ஆய்வுகள்தான் மக்களைக் காக்க உதவும் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்களே கூறுகிறார்கள்.
Summary
What happened to the popular asafoetida companies The background behind the ban
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




