தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.