சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 16 நிமிடங்களில் சந்திரயான்-2 விண்கலத்தை புவிவட்டப் பாதையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நிலைநிறுத்தியது.