தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், சென்னையில் உள்ள அனைத்து முதன்மையான சாலைகளிலும், தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருநதும் பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் இடையூறின்றிப் பயணித்தனர்.