யமுனை நதியின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள நிலையில், நொய்டாவில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் உள்ள ஹிண்டன் ஆற்றில் நீர்வரத்து திடீரென அபாய அளவை தாண்டியதால் வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 350-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.
ஈகோடெக் 3 அருகே ஹிண்டன் ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கின.
காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நொய்டா ஈகோடெக் 3 புறநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது.