

தீர்வு : வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று) இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன் இஞ்சி (5 கிராம்) பூண்டு பல் (5), மிளகு (1 ஸ்பூன்) சீரகம் (1 ஸ்பூன்) சோம்பு (1 ஸ்பூன்), தனியா விதை (1 ஸ்பூன்), கறிவேப்பிலை (சிறிதளவு) இவை அனைத்தையும் எடுத்து நன்றாக இடித்து கஷாயம் வைத்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வரவும்.
வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து பொறியல் செய்து மதிய வேளை உணவில் அதிகமாக வைத்து சாபாபிட்டு வரவும்.
சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ, பி6 , சி, இ, கே)
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.