திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கிறதா?

முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், புதினா இலையின் சாற்றினை முகத்தில் பருக்கள்

News image
Updated On :8 ஜூன் 2019, 9:27 am

முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், புதினா இலையின் சாற்றினை முகத்தில் பருக்கள் மீது தடவி அரைமணி ஊற விட்டு பின்பு முகத்தினை கழுவ வேண்டும். இவ்வாறு  தொடர்ந்து செய்ய, பருக்கள் முகத்தில் இருக்காது. மாசு மருவின்றி பொலிவுடன் முகம் காணப்படும்.

உடலில் வலி இருந்தால்.....கண்டந்திப்பிலி ரசம் வைத்து, குழைந்த சாதத்துடன் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உடல் உறுப்புக்களில் வலி இருக்காது. நல்லெண்ணையை உடலில் முழுக்க தேய்த்து குளிக்கும் போது வலி மற்றும் உஷ்ணம் குறையும்.

மேனி பளபளக்க வேண்டுமானால் அன்றாடம் சுத்தமான தேங்காய் எண்ணையை குளிக்கும் முன்பு முகம், கைகள், முழங்கால்கள், கழுத்தில் நன்கு தடவி ஊற வைத்து குளித்தால் மேனி பளபளப்பாகும். சருமத்தின் நிறம் கூடும்.

இரவில் மஞ்சள் பொடி,மிளகு பொடி சிட்டிகை  பாலில் சேர்த்து கொதித்ததும் பனஙகற்கண்டு போட்டு குடித்தால் தொண்டைகட்டு, கரகரப்பு சரியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.