கழுத்து வலி முழுமையாக குணமாக உதவும் அற்புத தேனீர் இது!

இடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக  குணமாகவும், நல்ல நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத தேனீர்
கழுத்து வலி முழுமையாக குணமாக உதவும் அற்புத தேனீர் இது!
Published on
Updated on
1 min read

இடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக  குணமாகவும், நல்ல நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத தேனீர்
 
தான்றிக்காய் காபி

தேவையான பொருட்கள்

தான்றிக்காய் - கால் கிலோ
நன்னாரி - 50 கிராம்

செய்முறை : மேற்கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக இடித்து பின்பு வாணலியில் போட்டு நன்கு வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

தினமும் ஒரு ஸ்பூன் அளவு தூள் எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தவும்.

பலன்கள் : இந்த தேனீரை தினமும் அருந்தி வந்தால் இடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக நீங்கும் மற்றும் நல்ல நினைவாற்றலை உண்டாக்கும் மேலும் மூலசார்ந்த பிரச்னைகள், ரத்த மூலத்திற்கும் மிகச் சிறந்த தேனீர்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com