நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சுவையான அத்திப்பழ அல்வாவில் இத்தனை சத்துக்களா?

பேரீச்சம் பழ மில்க் ஷேக், பேரீச்சம் பழ துவையல், பேரீச்சம் பழ அல்வா, பேரீச்சை அத்தி பழ அல்வா, பேரீச்சம் ஹோம்மேட் சாக்லேட்

News image
Updated On :4 ஜூன் 2018, 4:37 pm IST

தேவையானவை:
பேரீச்சம் பழம் - 100 கிராம்
உலர்ந்த அத்திப் பழம் - 2
நெய் - 150 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
எண்ணெய் - 50 மி.லி
முந்திரி - 25 கிராம்
திராட்சை 25 கிராம்
வெள்ளரி விதை - 2 தேக்கரண்டி
பழ ரக எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை: பேரீட்சை மற்றும் அத்திப் பழங்களைச் சேர்த்து முதல் நாள் இரவு மூழ்கும் அளவில் நீர் சேர்த்து காலை வரை ஊற வைக்கவும். பின்னர், அந்த நீருடன் நைசாக அரைக்கவும், வாணலியில் நெய், எண்ணெய்யை ஒன்றாக சேர்க்கவும். பின் சர்க்கரை, அரைத்த பேரீட்சை விழுது சேர்த்து நன்றாக கிளரவும். கிளறும் போது நெய், எண்ணெய் கலவை ஒன்றாக சேரும் அளவு நன்றாக கிளரவும் ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை மற்றும் சிறிதளவு பழ ரக எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பேரீச்சை அத்தி பழ அல்வா தயார். 

குறிப்பு: பேரீச்சை அல்வா செய்யும் போது கருப்பு பேரீச்சையாக இருக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதிகளில் பேரீட்சை அல்வா பிரபலம். இதில் அதிகளவு இரும்பு சத்து இருப்பதால், ரம்ஜான் நோன்பு காலங்களில் உடல் சோர்வை நீக்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.