பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அதிகப்படியான பித்தத்தின் அளவைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்க உதவும் கஞ்சி

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கொட்டிக் கிழங்கு மாவைத் கரைத்துக் கொள்ளவும்.

Published On :

கொட்டிக் கிழங்கு கஞ்சி

தேவையான பொருட்கள்

கொட்டிக் கிழங்கு மாவு - 50 கிராம்
பசும்பால் - 50  மி.லி
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - அரை லிட்டர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கொட்டிக் கிழங்கு மாவைத் கரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அப்பொழுது மாவு கட்டி தட்டாமல் கிளறி விட வேண்டும்.

நிறம் மாறி வெந்த நிலை வந்தவுடன் அதனுடன் பசும்பால் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி உடலின் அதிகப்படியான பித்த தன்மையுள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் அதிகப்படியான பித்தத்தின் அளவைக் குறைக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி. மேலும் உடல் உஷ்ணத்தை குறைத்து வெள்ளைப்படுதல் குறைபாட்டை சீராக்கும் அற்புத கஞ்சி.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு 

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.