விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மேற்குவங்க ஆளுநர் மீது குடியரசுத் தலைவரிடம் மார்க்சிஸ்ட் புகார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கடிதம் எழுதி உள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 12:42 am IST

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கடிதம் எழுதி உள்ளார்.

புது தில்லியில் முதல்வர் மம்தா பானர்ஜி, நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இடது சாரி மாணவர் அமைப்புகளால் தாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பொலிட் பீரோ மன்னிப்பு கோர வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் காரத் எழுதிய கடிதம்: தில்லி சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி பொலிட் பீரோ மன்னிப்பு கோர வேண்டும் என மாநில ஆளுநர் கூறியது நியாயமானதா? இது அரசியல் தலையீடு.

ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்து அவரது பதவிக்கு அழகல்ல. தேவையற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியினர், அலுவலகங்களை இலக்கு வைத்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆளுநரின் கருத்து வன்முறையாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடைபெற்றது என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. அரசமைப்பு சட்ட பதவி வகித்து வரும் அவர்,

ஒரு கட்சி ஜனநாயக ரீதியாக செயல்பட தகுதியற்றது எனக் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் எம்.கே.நாராயணன் வெளியிட்ட கருத்து குறித்து ஆய்வு செய்து அவருக்கு நீங்கள் உரிய அறிவுறை வழங்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார் காரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.