அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை கடந்த நான்கு நாள்களில் மட்டும் 37 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்குள்ள குகையில் இயற்கையாக பனி லிங்கம் உருவாகும். ஒரு சில மாதங்கள் மட்டுமே பனி லிங்கம் காணப்படும். இந்தப் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். தற்போது அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அமர்நாத் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களில் மட்டும் 37 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 35,627 பேரும், திங்கள்கிழமை காலை 1,600-க்கு மேற்பட்டவர்களும் தரிசனம் செய்துள்ளனர்.
தவிர திங்கள்கிழமை காலை 1044 யாத்திரிகர்கள் ஹெலிகாப்டரில் குகைக்கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதனிடையே, பகவதி நகர் முகாமில் இருந்து 80 வாகனங்கள் 2,168 பக்தர்களை ஏற்றிக்கொண்டு பகல்காம் மற்றும் பல்டால் காஷ்மீர் முகாம்களுக்குச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். அங்கிருந்து அவர்கள் அமர்நாத்துக்கு பயணம் மேற்கொள்வர். 6,381 பக்தர்களை கொண்ட யாத்ரிகர்கள் குழு பல்டால் முகாமில் இருந்து திங்கள்கிழமை அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
இதுவரை ஜம்மு முகாமில் இருந்து மட்டும் மொத்தம் 9,974 பேர் அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

