ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காங்கிரஸ், பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்: இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று இடதுசாரிக்

Updated On :1 ஜூலை 2013, 7:51 pm

அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிசக் கட்சி (ஆர்.எஸ்.பி.) மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளின் தேசிய அரசியல் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில், பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, தேவவிரத பிஸ்வாஸ், அபானி ராய் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அரசியல் பிரகடனமும், மாற்றுக் கொள்கைக்கான 10 அம்சத் திட்டமும் ஒருமனதாக நிறைவேறியது.

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, மாற்றுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணையுமாறு அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளையும் கேட்டுக் கொண்டனர். மாநாட்டில் நிறைவேறிய அரசியல் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள பிரச்னைகள் தொடர்பாக அடுத்த 4 மாதங்களில் நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், ""மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெற வேண்டும். ஆனால் அது முன்கூட்டியே வருவதற்கும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க. அல்லாத ஒரு முன்னணியை உருவாக்க நம்மால் முடியும். ஆனால் தேர்தலுக்காக மட்டுமே உருவானால் அது மாற்று அணியாக இருக்க முடியாது. அது மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் கூறுகையில், ""அடுத்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தலா 110-120 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் மகிழ்ச்சி அடையும். ஆனால் அவை அத்தனை இடங்களில் வென்றால் அது பெரிய அதிசயமாக இருக்கும். ராகுல் காந்தியையோ, மோடியையோ கண்டுகொள்வார் யாரும் இல்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அணியை தேர்தலுக்கு முன்பே அமைக்க சில கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு அமைக்க சில கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் அந்தக் கூட்டணியானது கொள்கை அடிப்படையில் உருவாகாவிட்டால், அது உரிய வகையில் அமையாது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.